Monday, April 7, 2008

இவரல்லவோ வாத்தியார்?

அஞ்சும் அஞ்சும் எத்தனைன்னு கண்டுபுடிக்க கால்குலேட்டரத் தேடும் இந்தக் காலத்துல, மனக்கணக்கு மூலமே மாணவர்களை, குறிப்பா கிராமத்து மாணவர்களைச் சிக்கலான கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்கச் செய்து அசத்தி வருகிறார் ஒரு ஆசிரியர்!

அந்த ஆசிரியர் பெயர் : திரு.எம்.காளிமுத்தன். இராமனாதபுரம் அரசினர் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். 2006 ம் ஆண்டுக்கான 'டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது' பெற்றவர்! கிராமத்து மாணவர்கள் தங்கள் ஞாபக சக்தியைப்் பயன்படுத்தி கணக்கிலும், ஆங்கிலத்திலும் வெற்றியடைய உதவி செய்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்த முறையைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு அவர்களின் புதைந்து கிடக்கும் சக்தியை வெளிக்கொணருவது இவரின் ஆசை. அதே சமயம், அவரின் இந்த பயிற்றுவிக்கும் முறைக்கு காப்புரிமை (patent) பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்!

திரு.காளிமுத்தன் அவர்களின் முயற்சி வெற்றி பெறவும், அவரின் தொண்டு தொடரவும் நம் வாழ்த்துக்கள்!

அவரையும் அவருடைய அசத்தும் மாணவர்களையும் நீங்கள் youtube-ல் சந்திக்கலாம்!

நன்றி: அருனா சேதுபதி அக்கா, ரவி வெங்கடேஷ் மற்றும் aimsindia.net